வியாழன், ஜூன் 09, 2011

ராம்தேவ்வின் ஆயுத போராட்டத்திற்கு ஹசாரே கடும் எதிர்ப்பு!!

ஜூன் 9, யோகா குரு ராம்தேவ், ‘’அடுத்த முறை போராட்டத்தில் பங்கேற்பவர்கள் ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்பார்கள்.
ராம்லீலா, ராவண்லீலாவாக மாறும்.

அப்போது யாருக்கு அடி விழுகிறது என்பதை பார்ப்போம். இதற்காக ஒவ்வொரு பிராந்தியத்தி லிருந்தும் 20 இளைஞர்கள் முன்வர வேண்டும்.

அவர்கள் 30 லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்களும் முன்வரலாம்.



அவர்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்படும்.

10 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய படையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்று கூறினார்.

ஆயுதம் தாங்கிபோராடப்போவதாக அறிவித்துள்ள யோகாகுரு பாபா ராம்தேவின் கருத்துக்கு அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இது ஒரு பயங்கரவாத சிந்தனையை தோற்றுவிப்பதாகும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். பாபா ராம்தேவ்வை ரகசிய போலீஸ்ஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக