வியாழன், ஜூன் 09, 2011

ராம்தேவ் உதவியாளரிடம் துப்பாக்கிகள்!! அதிர்ச்சி ரிப்போர்ட்!!

JUNE 9, பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா.  இவர் கடந்த 2005ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் வாங்கி உள்ளார்.

மேலும் ஆயுத சட்டத்தை மீறி 2 கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து உத்தரகண்ட் புலனாய்வு துறையினர் விசாரிக்கின்றனர். 



இப்போது பாலகிருஷ்ணாவிடம் தீவிர விசாரணை நடத்த பிரதமர் மன்மோகன் சிங்க்கும் உத்தரவிட்டுள்ளார். தவிர உத்தரகண்டில் நிலமோசடியில் ஈடுபட்டதாகவும் பாலகிருஷ்ணா மீது புகார் எழுந்துள்ளது.

இந்த ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆர்,எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மறைமுக தலைவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு இரண்டுவிதமான முகங்கள் உண்டு. ஒன்று மக்களுக்கு தெரியும் படி வெளிப்படியாக சாகா போன்ற பயிற்ச்சிகளை செய்வார்கள்.

அதே நேரம் மறைமுகமாக 'துப்பாக்கி சுடும் பயிற்சி', மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கொண்டு, 'குண்டு தாயாரிக்கும் பயிற்சி' ஆகியவைகளும் உண்டு. மேலும், பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. எனவேதான் இந்த இயக்கம் நேரிடையாக தீவிரவாத செயல்களில் ஈடுபடாமல் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது.

ஆர்.எஸ். எஸ். இயக்கம் திரைமறைவாக சில தீவிரவாத இயக்கங்களை நடத்தி வருகிறது. அந்த திரைமறைவு இயக்கத்தினர் நடத்தியதுதான், இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள்'. இந்த தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய 'ஹிந்துத்துவா தலைவர் சுவாமி அசிமானந்தா', 'மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக