சனி, ஜூன் 25, 2011

லிபியாவில் நேட்டோ படை தாக்குதலில் மேலும் 15 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்..

நேட்டோவின் போர் விமானங்கள், மீண்டும் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் குண்டுகளை வீசியுள்ளது உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது,
ப்ரேகா (Brega ) நகரின் ஒரு பேக்கரி மற்றும் ஒரு உணவகத்தின் மீது வீசப்பட்ட குண்டுகள், குறைந்தபட்சம் 15 பேர்களின் உயிரை பறித்தது மட்டுமல்லாமல், 20 க்கும் மேற்பட்டோரை படுகாயப்படுத்தியுள்ளது,

இதற்குமுன் சமீபத்தில்தான் திரிப்பொலி நகரில் நேட்டோ படை குண்டு வீசி பொதுமக்களை கொன்றது நினைவிருக்கலாம், தொழில்நுட்ப கோளாறினால் அந்த சம்பவம் நடந்தது என்று நேட்டோ படை மன்னிப்பு கோரியது,


"சிலுவைப்போர் ஆக்கிரமிப்பாளர்கள் முஸ்லிம்களை கொல்வதற்காக திட்டமிட்டே இந்த தாக்குதல்களை நடத்துகிறார்கள்" என்று உள்ளூர் தொலைக்காட்சி கூறுகிறது,

பலபேர் படுகயமடைந்ததினால் மரண எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது,

"பொதுமக்களை காப்பதற்குத்தான் விமான நடவடிக்கைகள் என்று நேட்டோ கூறியபோதும், நேட்டோவின் குண்டுவீச்சில் கொல்லப்படும் அப்பாவி பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது" என்று லிபிய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்,

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் பல அப்பாவி சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது,

"லிபியாவின் மீது மேற்கத்திய நாடுகள் படையெடுத்தது, அங்குள்ள மக்களை காப்பாற்ற அல்ல, மாறாக லிபியாவின் எண்ணை வளத்தினை அபகரிக்கவும், வட ஆப்பிரிக்காவில் தனக்கான ஒரு தளத்தினை உருவாக்கவும் தான்", என சில போர் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

source: presstv.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக