வடக்கு கஷ்மீரில் பந்திபோரா, பாரமுல்லா, குப்வாரா ஆகிய மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளில் ஆயிரக்கணக்காண இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. போலீஸ் கைதுச்செய்த பிறகு காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய மாநில மனித உரிமை கமிஷனின் புலனாய்வு பிரிவு 2000 அடையாளம் தெரியாத கல்லறைகள் இம்மாவட்டங்களில் இருப்பதாக ஒப்புக்கொண்டது. இந்த உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ பரிசோதனை நடத்தவேண்டும் என்று மனித உரிமை கமிஷனின் புலனாய்வு குழு சிபாரிசு செய்தது.
இக்காரியத்தை உட்படுத்திய அறிக்கையை கமிஷன் மாநில அரசிடம் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியது. காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கவும், நிரபராதிகளை கொலைச் செய்தவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவரவும் கமிஷன் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக