திங்கள், ஏப்ரல் 18, 2011

தேர்தல்:மலேசியாவில் ஆளுங்கட்சிக்கு வெற்றி


2_428822_1_248
கோலாலம்பூர்:மலேசியாவில் மிகப்பெரிய மாநிலமான ஸரவாக்கில் நடந்த தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றிப் பெற்றுள்ளது.
71 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் நஜீப் அப்துற்றஸ்ஸாக் தலைமை வகிக்கும் நேசனல் ஃப்ரண்ட் 36 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது.
2013-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேசிய தேர்தலின் முன்னோடியாக நடக்கும் மாநில தேர்தலாகும் இது. பெரும்பான்மை இடங்களை கைப்பற்றினால் தேசிய தேர்தல் முன்கூட்டியே நடைபெறும் என கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக