செவ்வாய், டிசம்பர் 13, 2011

உலமாக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அதிகரிப்பு !

சென்னை : உலமாக்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை 750 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக அதிகரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு  3.12 கோடி ரூபாய் செலவாகும். வக்பு வாரியத்தின் நிதிப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, வக்பு வாரியத்திற்கு சிறப்பு தொகையாக 3 கோடி ரூபாய் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மாநில ஹஜ் குழு நிதி நெருக்கடியில் உள்ளதையும்
கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் அரசு மானியத்தை 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக