செவ்வாய், பிப்ரவரி 24, 2015

ஏ.டி.பி. டென்னிஸ் தரவரிசையில் பின்தங்கிய ரபேல் நடால்

சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 4-வது இடத்திற்கு பின்தங்கினார்.

ரியோவில் நடைபெற்று வரும் சர்வதேச போட்டியின் அரையிறுதியில் ரபேல் நடால் இத்தாலி வீரர் போக்னியிடம் தோல்வியடைந்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு களிமள் ஆடுகளத்தில் அரையிறுதியில் தோற்ற நடால், இன்று வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் ஒரு இடத்தை இழந்தார். அத்துடன் 2013-ம் ஆண்டுக்குப் பிறகு தரவரிசையில் டாப்-3 இடத்தை இழப்பது இதுவே முதல் முறையாகும்.

அவர் ஏற்கனவே இருந்த 3-வது இடத்தை இப்போது இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே பிடித்துள்ளார். இவர் கடைசியாக ரோட்டர்டாம் போட்டியில் காலிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் நோவக் ஜோகோவிச் முதலிடத்திலும், ரோஜர் பெடரர் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக