புதன், பிப்ரவரி 11, 2015

மேலப்பாளையம் 9 வயது சிறுமியை கடத்தி சித்ரவதை: சிபிஐ விசாரணை நடத்த எஸ் டி பி ஐ வலியூறுத்தல்

மேலப்பாளையத்தில் 9 வயது சிறுமியை சட்ட விரோதமாக கடத்தி சென்ற காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழக அரசுக்கு   எஸ் டி பி ஐ  வேண்டுகோள்!


நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியைச் சேர்ந்த சிறையிலிருக்கும் தென்காசி ஹனிஃபாவின் மகளான 4ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் 9 வயது சிறுமி முஹம்மது சமீராவை 08-02-2015 அன்று மாலை 5 மணிக்கு சட்டத்திற்கு புறம்பான முறையில் காவல்துறையினர் கடத்தி சென்று சித்திரவதை செய்ததோடு கொலை மிரட்டலும் விடுத்து இரவு 10.30 மணியளவில் தெரு முனையில் விட்டு சென்ற சம்பவம் மேலப்பாளையம் மக்களிடத்திலும், சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினரின் இதுபோன்ற சட்டவிரோத செயலை எஸ் டி பி ஐ வன்மையாக கண்டிப்பதோடு சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் உரிய வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டுமெனவும், அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தேவையான நிவாரணம் மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும், முஸ்லிம்கள் அதிகம் வாழக்கூடிய பகுதிகளில் முஸ்லிம் காவல்துறை அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் தீர்மானத்தை உடனே அமல்படுத்த வேண்டுமெனவும் தமிழக அரசை எஸ் டி பி ஐ  கேட்டுக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக