வியாழன், நவம்பர் 14, 2013

எகிப்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரநிலை நீக்கம்!

எகிப்து நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டது. இதற்கான உத்தரவை எகிப்தின் நிர்வாக நீதிமன்றம் நேற்று வெளியிட்டது.
இந்த நீதிமன்ற  ஆணைபடி, நேற்று மாலை 4 மணி முதல், எகிப்திலுள்ள அவசர நிலை நீக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் நடைமுறையான ஊரடங்கும் நீக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எகிப்தின் தற்காலிக அரசுத் தலைவர் அத்லி மான்சோர் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி  நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக