செவ்வாய், நவம்பர் 12, 2013

பாட்னா குண்டு வெடிப்பு : 5 'ஹிந்துத்துவா' பயங்கரவாதிகள் கைது!

1.கோபால், 2.கணேஷ், 3.பவன், 4.விசால், 5.ராஜு 

"ஊமை'யாகிப் போன ஊடகங்கள்"

நரேந்திர மோடியின் ஏற்பாட்டின் பேரில், பெரும் செலவில் கூலிக்கு ஆள் அமர்த்தி 'பாட்னா'வில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது, ஹிந்துத்துவ தீவிரவாதிகள் தான் என, தற்போது தெரிய வந்துள்ளது.

பாட்னாவிலிருந்து 150 கி.மீ. தூரத்தில் 'லக்கி சராய்' என்ற இடத்தில் வைத்து, தேசிய புலனாய்வு (NIA)அமைப்பினரால், சனிக்கிழமையன்று (09/11) கைது செய்யபபட்ட இவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புடைய, கோபால் குமார் கோயல், விகாஸ் குமார், பவன் குமார், கணேஷ் குமார் ஆகியோரிடமிருந்து பல்வேறு வங்கிகளின் 'ATM' கார்டுகள், ஏராளமான வங்கி பாஸ் புத்தகங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் 20-25 வயதுடையவர்கள் என்றும், இவர்கள் 'சங்பரிவார்' தீவிரவாத அமைப்புக்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு, இது போன்ற பாதக செயல்களில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இவர்கள் அளித்த தகவலின் பேரில், இன்றைய தினம் (11/11/13) ராஜு சாவ், என்ற மற்றொரு தீவிரவாதியும் கைது செய்யப்பட்டுள்ளான். 

பாட்னா குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரத்துக்குள்ளாகவே கைது செய்யப்பட்ட 'ஹிந்துத்துவா' தீவிரவாதி 'பங்கஜ்' குறித்து, அரச பயங்கரவாதிகளும் ஊடக ஊதாரிகளும், வாய் திறக்க மறுக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக