
அவர் பேசி முடித்து விட்டு சென்ற சில நிமிடங்களில் அந்த அரங்கில் திடீரென தீப்பற்றியது. இதில், அந்தப் பகுதியே புகை மண்டலமாகியது. உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், இதில் ஏதாவது சதி வேலை உள்ளதா என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.
தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணை அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அஜய் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். ஜூபிளி அரங்கு தீ விபத்து குறித்து முறையான, விரிவான விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை அளிக்குமாறு அவருக்கு முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக