
கடந்த மே 21-ஆம் தேதி நடந்த தாக்குதலில் 100 யெமன் ராணுவத்தினர் கொலைச் செய்யப்பட்டனர். 300 பேருக்கு காயம் ஏற்பட்டது. அந்த தாக்குதலில் பொறுப்பை அல்காயிதா ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. ஜூன் 23-ஆம் தேதி தெற்கு யெமன் மற்றும் வடக்கு யெமனில் அல்காயிதாவின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளை யெமன் ராணுவம் கைப்பற்றியது.
கடந்த மாதம் தெற்கு யெமனில் அல்காயிதா நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் ராணுவ தளபதி ஜெனரல் ஸலீம் அலி கொல்லப்பட்டார். கண்ணிவெடித் தாக்குதலிலும் ஏராளமான ராணுவத்தினர் கொலைச் செய்யப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக