வெள்ளி, மார்ச் 16, 2012

சவூதி: தாயைக் கொன்ற தனயனுக்கு மரணதண்டனை

 பெற்ற தாயைக் கொன்ற இளைஞன் ஒருவனுக்கு சவூதியின் ஜூபைல் நகரில் புதனன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.


மாதல்லாஹ் பின் சாதுன் அல்ஷம்மரி என்னும் பெயருடைய அந்த சவூதி இளைஞன் தன் தாய் சஹ்லா அல் ஷம்மரி என்பாரை கழுத்தை நெரித்துக் கொன்று பின்பு ஒரு கத்தியால் தலையைத் துண்டித்ததாக Sabg என்னும் அரபுத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.   இக்கொலைக்கான பின்னணி தெரியவில்லை.
குற்றத்தை அந்த சவூதி இளைஞன் ஒத்துக் கொண்டதையடுத்து, தீர்ப்புக்குப் பின்னர் அவனுக்குரிய மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.www.asiananbanblogspot.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக