புதன், மார்ச் 07, 2012

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூன்றடுக்கு மாடி இடிந்து விழுந்து 9 பேர் படுகாயம் !

பிலிப்பைன்ஸ் நாட்டில், நேற்று, 5.2 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து, 350 கி.மீ., தொலைவில் உள்ளது மஸ்பட்டி. மலை நகரமான இங்கு, ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
நேற்று காலை, 5.2 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டதில், மூன்றடுக்கு மாடி ஒன்று இடிந்து விழுந்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, சாலைகளில்
அமர்ந்துள்ளனர். பல வீடுகளில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. ஒன்பது பேர் இந்த நிலநடுக்கத்தில் காயமடைந்துள்ளதாக, முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக