பெரியார் தி.க., 17 இயக்கம், மக்கள் இயக்கம் உள்ளிட்டவை கருப்புக் கொடி காட்டின. எங்கு சென்றாலும் அன்னாவுக்கு பேராதரவு கிடைத்து வரும் நிலையில் சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது அவரது ஆதரவாளர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
ஜனநாயகத்திற்கு எதிராக, சர்வாதிகாரி போல செயல்படும் அன்னாவும் ஒரு பயங்கரவாதி தான். இந்தி வெறியரான அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர். அவர் இந்தியில் மட்டுமே பேசுகிறார் என்று பெரியார் தி.க.வினர் குற்றம் சாட்டினர்.
இருப்பினும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அன்னா ஹசாரே விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அன்னாவுடன் கிரண் பேடியும் உடன் வந்திருந்தார்.
இன்று மாலை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் அன்னா கலந்துகொண்டு ஊழலுக்கு எதிராகப் பேசுகிறார்.
முன்னதாக நேற்று அன்னா ஹசாரே, பெங்களூர் வந்திருந்தார். அங்குள்ள ப்ரீடம் பார்க்கில் நடந்த கூட்டத்தி்ல் அவர் பேசினார். அவரைப் பார்க்க சுமார் 15,000 பேர் குவிந்திருந்தனர். அங்கு அவர் ஊழலுக்கு எதிராகப் பேசினார்.
ஊழலுக்கு எதிராக ஊர், ஊராகப் பிரச்சாரம் செய்து வரும் அன்னா செல்லும் இடமெல்லாம் அவருக்கு மக்கள் அமோக ஆதரவு தந்து வந்துள்ள நிலையில் தமிழகத்தில் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக