இருந்த உணவுப் பொருள் வீணாதல் அளவு, 2009-10இல் 1.31 இலட்சம் டன்னாகவும், 2010-11இல் 1.56 இலட்சம் டன்னாகவும் இருந்ததென்றும், இந்த நிதியாண்டில் செப்டம்பர் மாதம் வரை இந்த வீணாகியுள்ள உணவுப் பொருட்களின் அளவு 87,000 டன் என்றும் கூறியுள்ளார்.
“உணவுப் பொருட்கள் ஈரத்தால் பாழாவதும், நீண்ட காலம் வைத்திருப்பதால் எலிகள் தின்பதாலும், பல முறை தொழிலாளர்களால் கையாளப்படுவதால் ஏற்படும் சிதறலும்தான் இதற்குக் காரணம்” என்று அமைச்சர் தாமஸ் கூறியுள்ளார்.
ஆண்டுக்கு ஆண்டு இப்படி உணவுப் பொருட்கள் வீணாகிவருவது அதிகரித்து வரும் நிலையில், “அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக” அமைச்சர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக