வியாழன், அக்டோபர் 20, 2011

புற்றுநோய்ச் செல்களை கட்டுப்படுத்தும் காரட் !!!

கேரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்  கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும். கேரட்டில் ஏ,சி, கே போன்ற உயிர்ச்ச த்துகளும் பொட்டாசியம் போன்ற தாதுப் பொருளும் உள்ளது. புற்றுநோய்ச் செல்களை அழிக்கும். நாம் உண்ணும் உணவில்  வேறு எந்த காய்கனிக்கும் இல்லாத சிறப்பு கேரட்டிற்கு மட்டுமே உள்ளது. இதில் உள்ள கேரட்டின் என்கின்ற உயரிய சத்து  புற்றுநோய்ச் செல்களைக் கட்டுப்படுத்துகிறது. கேரட்டில் பீட்டா கரோட்டின் என்னும் சத்து நம் உடலில் நோய் எதிர்ப்புச்  சக்தியினை அதிகப்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பீட்டாகரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கள்தான் புற்றுநோய்க்கு எதிரியாக இருந்து செயல்படுகின்றது. கண் பார்வைக்  குறை பாட்டினை போக்கும் வைட்டமின் ‘ஏ’ சத்துக்குறை பாட்டினால் ஏற்படும் மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தினமும்  கேரட்டினை சாப்பிட்டால் அவர்களுக்கு மாலைக்கண் நோய் எளிதில் குணமடைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் சக்தி கேரட்டிற்கு உள்ளதால் இதயம் தொடர்புடைய நோய்களை அ ண்டவே விடாது. வாரத்தில் இரண்டு நாட்களாவது நம் சமையலில் கேரட்டினைப் பயன்படுத்துவது உடம்பிற்கு நல்லது.  ஏனெனில் கேரட்டில் உள்ள நார்ச்சத்து மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தைத் தூண்டி நல்ல ஜீரண சக்தியைத் தரு கின்றது.
கேரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். தினமும் கேரட்டினை உண்பவர்களை ‘ஸ்ட்ரோக்’ எனப்படும் பக்கவாத  நோய் எட்டிப் பார்ப்பதில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மூளையைச்  சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக கேரட்டினை மென்று சாப்பிட்டால்  பற்களின் கரைகள் போய் விடும். தாங்க முடியாத பசியையும் ஒரே ஒரு கேரட் போக்கி விடும். அல்சரை குணப்படுத்தும்,  பீட்டா கரோட்டின் என்னும் சத்து வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகின்ற சக்தி கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக