சனி, அக்டோபர் 29, 2011

வெடிப் பொருட்களுடன் வந்த இஸ்ரேல் பெண் மும்பையில் கைது


இன்று காலை மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையத்தில் இஸ்ரேலிலிருந்து வந்திறங்கிய ஒரு பெண் வெடிப்பொருட்கள் வைத்திருந்த காரணத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நூராத் T என்னும் பெயருடைய அந்த 23 வயதுடைய பெண்ணை சுங்க அதிகாரிகள் பரிசோதித்தபோது, வெடிக்கத் தக்க விதத்தில் உள்ள துப்பாக்கியில் பயன்படுத்தத் தக்க வெடிப்பொருட்களைக் கண்டெடுத்தனர்.
இதனை முன்னிட்டு, அப்பெண்ணை மாநகர காவல்துறையில் ஒப்படைத்தனர். காவல்துறை அப்பெண்ணை கைதுசெய்து விசாரித்து வருகிறது என்று துணை ஆணையர் சத்யநாராயண சவுத்ரி தெரிவித்துள்ளார்.
எத்தனை வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்ற விபரத்தை துணை ஆணையர் தெரிவிக்கவில்லை. நண்பர்களுடன் சுற்றுலா என்னும் காரணத்தில் அப்பெண் இந்தியா வந்துள்ளார். நேபாளம் செல்லவும் திட்டமிட்டிருந்தாராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக