மஹாராஷ்ராவில் தமிழர்கள் உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களின் மீது வெறுப்பை உமிழ்ந்து ‘மராட்டியம் மராட்டியர்களுக்கே’ என்ற கொள்கையை உள்ளத்தில் சுமந்து வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட பால்தாக்கரே, முஸ்லிம்கள் மீது தொடர்ந்து அவதூறுகளையும், வன்முறைகளையும் ஏவி வருபவர். மஹராஷ்ட்ராவை வன்முறை களமாக்குவதில் முதலிடம் வகிக்கும் பால்தாக்கரே தற்பொழுது ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத’ கதையாக மராத்வாடா குறித்து கவலைப்படுகிறார்.
மும்பை காட்கோபர் குண்டுவெடிப்பு, ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு, குஜராத் வெடிகுண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்ட எல்லா தீவிரவாதிகளும் மராத்வாடாவை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் மராத்வாடா ஒரு புதிய பாகிஸ்தானாக மாறி வருவது மகாராஷ்டிராவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் பால் தாக்கரே கவலைக்கொள்கிறார்.
பால்தாக்கரே கூறிய மேற்கண்ட அனைத்திலும் அப்பாவிகளே பலிகடாவாக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இனப்படுகொலைகளையும், கலவரங்களையும், குண்டுவெடிப்புகளையும் தங்களது செயல்திட்டமாக கொண்டு இயங்கும் சங்க்பரிவார்களும், பால் தாக்கரே கும்பலும் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதும், தேசத்திற்காக முதலைக் கண்ணீர் வடிப்பதும் வழக்கமாகிவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக