ஆனால் இப்படிப்பட்ட லாப்டர் யோகா கிளப் ஒன்றுக்கு சிரிப்பை நிறுத்தும்படி மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு விட்டது....
மும்பை குர்லாவைச் சேர்ந்தவர் வினாயக் சிர்சாத். இவருக்கு 78 வயதாகிறது. இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டார். அதில், எனது பகுதியில் ஒரு லாப்டர் யோகா கிளப் உள்ளது. இந்த கிளப்பைச் சேர்ந்தவர்கள் தினசரி காலை 7 மணிக்கு எனது வீடு அருகே கூடுகிறார்கள். பின்னர் சத்தம் போட்டும், அசிங்கமாகவும் உரக்க சிரிக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்களால் எனக்கு பெரும் மன உளைச்சலும், நிம்மதியின்மையும் ஏற்படுகிறது.
இவர்களது சிரிப்பு மிகவும் சத்தமாக இருப்பதால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அப்பகுதி பொதுமக்களுக்கும் பெரும் தொந்தரவாக இருக்கிறது.
யாராவது லேசாக சிரித்தால் கூட மற்றவர்கள் அவரை சத்தம் போட்டு சிரிக்குமாறு தூண்டுகிறார்கள். இவர்கள் சிரிப்பதை விட மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பதற்காகவே வருவது போலத் தெரிகிறது.
இதை உடனே தடுத்து இவர்கள் இப்படி தெருவில் கூடி நின்று சிரிப்பதற்குத் தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அடுத்தவர் வீட்டின் முன்பு கூடி சத்தம் போட்டு சிரிப்பதும், தொந்தரவு செய்வதும் நல்லதில்லை, முறையில்லை. எனவே இந்த கிளப்புக்கு அப்பகுதியில் நின்று சிரிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்று அதிரடி உத்தரவிட்டனர்.
மேலும் லாப்டர் கிளப்பைச் சேர்ந்தவர்களை சிரிக்காமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்பதை ஒரு வாரத்திற்குள் சொல்லுமாறு காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
1995ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கத்தாரியா என்பவர்தான் இந்தியாவில் இந்த லாப்டர் யோகா தெரப்பியை அறிமுகம் செய்தவர். அதன் பிறகு அதிக நாடு முழுவதும் பரவி விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக