அதேவேளையில் சுகாதார காரணங்களால் நடத்தப்படும் விருத்தசேதனம் சட்டவிரோதம் இல்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நான்கு வயதான சிறுவனுக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டது தொடர்பான விவகாரம் நீதிமன்றத்திற்கு தெரியவந்தது. சிறுவன் ஒருவருக்கு விருத்தசேதனம் செய்ததில் ஏற்பட்ட தவறால் இரத்தம் அதிகளவு வெளியாகி அவனை மருத்துவமனைக்கு பெற்றோர் சிகிட்சைக்காக அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து இப்பிரச்சனை விவாதமாகியது. சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் மருத்துவமனைக்குச் சென்று டாக்டர்கள் மீது க்ரிமினல் குற்றத்தை பதிவுச்செய்தனர். ஆனால், நீதிமன்றம் டாக்டர்களை விடுவித்துள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஜெர்மனியில் வசிக்கும் முஸ்லிம்கள் மற்றும் யூதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிறுவர்களுக்கு விருத்த சேதனம் செய்வது சுகாதார ரீதியான பாதுகாப்பை அளிக்கும் என்பது மருத்துவ ஆய்வின் உறுதியான முடிவாகும். முஸ்லிம்களும், யூதர்களும் தங்களது ஆண் பிள்ளைகளுக்கு விருத்த சேதனம் செய்வதை மத வழக்கமாக கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக