இந்த விவகாரத்து மனு தாக்கலுக்குப் பிறகு நேற்றுதான் முதன் முறையாக இருவரும் நீதிமன்றத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வழக்கறிஞர்கள் அறைக்குள் ஜெயந்தி சென்றுவிட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த கணவர் பிரசாந்த்ஜித் வழக்கறிஞர்கள் அறைக்குள் சென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெயந்தியின் தலையில் வெட்டினார். வழக்கறிஞர்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் போது மீண்டும் மீண்டும் ஜெயந்தியை வெறிபிடித்தார்போல் அவர் வெட்டினார். அங்கு இருந்த நீதிமன்ற பணியாளர் ஒருவர் துணிச்சலுடன் பிரசாந்த்ஜித்தை மடக்கினார். பின்னர் மிகவும் ஆபத்தான நிலையில் ஜெயந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீசார் பிரசாந்த்ஜித்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பிரசாந்த்ஜித்தின் வெறிச்செயலால் வழக்கறிஞர்கள் பலரும் ரத்தத் துளிகளால் நனைந்திருந்த காட்சி பார்வையாளர்களை கதிகலங்க வைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக