சனி, ஜூலை 30, 2011

திரிபோலி நகரம் மீது மீண்டும் தாக்குதல்..

30-07-2011 திரிபோலி, நேற்றிரவு 10 மணியளவில் கடாபி வீட்டருகே உள்ள சிட்டி சென்டரில் குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன என்று AFP செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த வியாழன்று லிபிய புரட்சி குழுவின் தலைமை அதிகாரி அப்துல் பாத்தாஹ் யூனுஸ், பெங்காஜி நகரில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார் என லிபிய அரசு அறிவித்துள்ளது.

இவர் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்துள்ளார், பின்னர் அதிலிருந்து பதவி விலகி, புரட்சி குழுவை தலைமையேற்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது,

கடந்த ஏப்ரலில் பொது மக்களை, அரசு ராணுவம் கொல்வதை தடுத்து நிறுத்துவதில் நேட்டோ படை தோல்வி கண்டுவிட்டது என நேட்டோ மீது குற்றம் சுமத்தியிருந்தார்,

பொதுமக்களை காப்பாற்ற தரை படையெடுப்பை தவிர்த்து, தேவைப்பட்டால் மற்ற வழிகளில் தாக்குதல் நடத்த அதிகாரம் வழங்கும் தீர்மானத்தை கடந்த மார்ச் 17 - ம் தேதி ஐ.நா.பாதுகாப்பு சபை எடுத்தது.

அதன்படி மார்ச் 19 முதல் நேட்டோ படை லிபிய ராணுவ கேந்திரங்களின் மீது வான்வெளி தாக்குதல்களின் மூலம் குண்டுபோட ஆரம்பித்தது. அதிலிருந்து நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக