சனி, ஜூலை 30, 2011

மேற்குக்கரை ஆர்பாட்டத்தில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல்..

 30-07-11, மேற்குக்கரையிலுள்ள நபிஸலிஹ் கிராமத்தில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு எதிர்ப்பு  ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது, இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்தவர்களில் ஒரு வெளிநாட்டு தன்னார்வலர் பெண்ணும், இரண்டு பாலஸ்தீன் பெண்களும் அடங்குவர்,

ஆர்பாட்டம் நடைபெற்ற இடம், மேற்க்குகரயிலுள்ள பிளின் கிராமமாகும், இது ரமல்லா, நபிஸலிஹ் மற்றும் அல் மஃஸரா ஆகிய ஊர்களுக்கு அருகிலுள்ளது.  இவை பெத்லேஹம் நகருக்கு அருகில் உள்ளவையாகும்,

இஸ்ரேலிய படைகள், செய்தியாளர்களையும், மருத்துவ உதவி குழுவினரையும் அடித்து விரட்டினர் என்றும், பொதுமக்களின் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது என்றும், ரப்பர் பூசப்பட்ட எஃகு தோட்டாக்களினால் சுட்டனர் என்றும்  பாலஸ்தீன பாப்புலர் கமிட்டி கூறியது,

ஒவ்வரு வாரமும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்பும் பிளின் மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து வரும் குடியிருப்புவாசிகள், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை பகுதியில் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர், எப்பொழுதுமே இஸ்ரேலிய படைகள் அங்குள்ள ஆக்கிரமிப்பு சுவரை நெருங்க விடுவதில்லை, இம்முறை கண்ணீர் புகைகுண்டு மற்றும் ரப்பர் தோட்டவினால் பொதுமக்களை தாக்கியுள்ளனர்,

இனவெறி சுவர் (Apartheid wall)

இது அப்பகுதியில் வாசித்த பாலஸ்தீனர்களை அவர்களின் சொந்த நிலங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, ஆக்கிரமித்து அமைக்கப்பட்டதாகும், என பாலஸ்தீனர்களும், உலக அமைதி நடவடிக்கை குழுவினரும் கூறுகின்றனர்,

60 % பிளின் பகுதி நிலத்தை அபகரித்த போதும், அதை எதிர்த்து, 6 வருடங்களாக போராடிவரும் உள்ளூர் கிராமவாசிகள், இதுவரை எந்த வன்முறையிலும் ஈடுபட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது,


டெல் அவிவ் , 2000-ல், மேற்க்குகரையில் முள்வேளிகளை கொண்டு இதை அமைக்க ஆரம்பித்தது, 2004-ல், உலக நீதிமன்றம், இது சட்டத்திற்கு புறம்பானது என்றும், இது அகற்றப்படவேண்டியது என்றும், கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக