கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க அப்பீல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெதர்லாந்து ராணுவம் ஐ.நா அமைதிப்படையின் கீழ் செயல்பட்டாலும் ஸ்ரெப்ரெனிகா தாக்குதலிலும், மக்களை கூட்டமாக வெளியேற்றியதிலும் நெதர்லாந்து அரசு அதிகமாக தலையிட்டுள்ளது. ஆதலால் டச்சு அரசு மூன்று முஸ்லிம்களின் மரணத்திற்கு பொறுப்பாகும் என நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
டச்சு(நெதர்லாந்து) ராணுவத்தினர் ஐ.நா அமைதிப்படையின் கீழ் செயல்பட்டதால் நெதர்லாந்திற்கு முஸ்லிம்களின் மரணத்திற்கு பொறுப்பல்ல என 2008-ஆம் ஆண்டு கீழ் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பு இழப்பீடு தொகை கிடைக்க வழிகோலும் என கருதப்படுகிறது.
ஐ.நா அமைதிப்படையின் கீழ் செயல்பட்ட டச்சு ராணுவத்தில் எலக்ட்ரீசியனாக பணியாற்றிய ரிஸோ முஸ்தாஃபிச், இன்னொரு ராணுவ வீரர் ஹஸன் நுஹாநோவிச் ஆகியோரின் உறவினர்களை டச்சு ராணுவம் செர்பிய ராணுவத்தினரிடம் ஒப்படைத்தது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இத்தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. ராணுவ தலைமையகத்தில் அடைக்கலம் தேடியவர்களை போர் குற்றவாளியான ராத்கோ மிலாடிச்சின் கீழ் செயல்படும் ராணுவத்திடம் ஒப்படைத்தது நெதர்லாந்து ராணுவம்.
thoothu online
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக