அன்னானுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் முஅல்லம், சிரிய அரசு எடுத்து வரும் சீர்திருத்த நடவடிக்கைகளை குலைப்பதற்காக கலகக்காரர்கள் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். தீவிரவாதிகள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதோடு, அவர்களுக்கு ஆயுதங்கள் உதவி செய்பவர்களும் நிறுத்தினால்தான், அன்னானுடைய சமாதான திட்டம் வெற்றி பெறும் என பஷார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பஷாருக்கு எதிராக மார்ச் 2011 முதல் தினமும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஏறத்தாழ 13000 பொது மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.இதனிடையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், கனடா உள்ளிட்ட நாடுகள் சிரியத் தூதர்களை தங்களது நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக