இத்தாலியின் சான் பெல்சி பனாரோ நகர் மற்றும் மிரண்டாலோ பகுதிகளில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். இத்தாலியின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் ஏற்கனவே இம்மாதம் 20-ம் தேதி 6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 6 பேர் பலியாயினர். அன்றைய நிலநடுக்கத்தால் 7 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்தனர். இத்தாலியில் கடந்த 2 வாரங்களாக தொடந்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கம் அங்குள்ள மக்களை பீதி அடையச் செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக