செவ்வாய், மார்ச் 22, 2011

திண்டுக்கல் காவல் துறையின் முஸ்லிம் விரோத போக்கு-பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கடும் கண்டனம்

திண்டுகல்லில் பயங்கரவாத எதிர்ப்பு பேரணிக்கு அனுமதி மறுப்பு பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் .எஸ்.இஸ்மாயில் தலைமையில் நூற்றுக்கனக்க்கானோர் கைது.இது சம்பந்தமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

கடந்த 2010 டிசம்பர் 6 முதல் ஜனவரி 30 வரை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தேசிய அளவில் பாபரி மஸ்ஜித் விழுப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது தமிழகத்திலும் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் தெருமுனை கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன
இந்த தேசத்தில் இரு பெரும் பயங்கரவாத செயல்கள் ,ஒன்று தேச தந்தை மகாத்மா காந்தி படுகொலை, இரண்டாவது மாபெரும் வரலாற்று சின்னமும் முஸ்லிம்களின் வழிபாட்டு தளமுமான பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது .இந்த இருபெரும் பயங்கரவாத செயல்களை தமிழக மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்கில் விழுப்புணர்வு பிரச்சராத்தின் நிறைவு தினமான ஜனவரி 30  பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுகூட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆனால் இந்த பயங்கரவாத எதிர்ப்பு கூட்டத்திற்கு அன்றைய தினம் திண்டுக்கல் காவல்துறை அனுமதி மறுத்து பேரணி நடத்த முயன்ற பாப்புலர் பிரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹ்மத் பக்ருதீன் உட்பட பாப்புலர் பிரண்டின் செயல் வீரர்கள் ,தொண்டர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர் .அதனை தொடர்ந்து அந்த அராஜகத்தை கண்டிக்கும் விதமாகவும் திண்டுக்கல் காவல்துறையின் முஸ்லிம் விரோதபோக்கை கண்டித்தும் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாகவும் 20-03-2010  திண்டுக்கல் பேகம்பூரில் பாப்புலர் பிரண்டின் மாநில தலைவர் .எஸ்.இஸ்மாயில் தலைமையில் பாப்புலர் பிரண்டின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 ஆனால் பேரனியையையும் பொதுக்கூட்டத்தையும் தடை செய்த காவல்துறை பேரணி செல்ல முயன்ற மாநில தலைவர் .எஸ்.இஸ்மாயில் மற்றும் பாப்புலர் பிரண்டின் செயல் வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்துள்ளது என கூறியுள்ளார்.  

காவல்துறையின் இச்செலையை கண்டித்து பாப்புலர் பிரண்டின் மாநில தலைவர் மக்களின் உரிமை போராட்டத்தை நசுக்கும் திண்டுக்கல் காவல்துறையின் இச்செயலை பாப்புலர் பிரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.
 நீதிக்கான போராட்டத்திலும் காவி பயங்கரவாதத்தை மக்களிடத்தில் தோலுறுத்திக்காட்டும் முயற்சியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா,ஒருபோதும் பின்வாங்காது என்று தெரிவித்துள்ளார். பாப்புலர் பிரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் .முஹம்மது யூசுப், பாப்புலர் பிரண்டின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் .கைசர் ,ஆகியோரும் மாநில தலைவருடன் கைதாயினர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக