செவ்வாய், மார்ச் 22, 2011

பாகிஸ்தான்: சுரங்க விபத்தில் 45 பேர் பலி


பாகிஸ்தானில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 45 பேர் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பலுச்சிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகர் அருகே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடித்தது. 

இதில் முதலில் 5 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகின.46 பேர் சுரங்கத்துக்குள் சிக்கி கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. 


இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்து உள்ளது. 

இதுவரை 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், மற்றவர்களின் உடல்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக