ஞாயிறு, மே 04, 2014

MH370: கேப்டன் சஹாரியின் சிமுலேட்டர் தகவல்கள் மீட்கப்படவில்லை

கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதி காணாமல் போன  MH370 விமானத்தின் விமானி கேப்டன் சஹாரியின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட சிமுலேட்டரிலிருந்து அழிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் இன்னமும் மீட்கப்படவில்லை என அரச மலேசிய காவல்படை தலைவர் டான் ஶ்ரீ அபு பாக்கார் தெரிவித்தார்.

“எங்களால் ஒரு சில தகவல்களை தான் திரட்ட முடிந்தது” என்றால் அவர்.
சம்பந்தப்பட்ட சிமுலேட்டர் குறித்த விசாரணை நடைபெற்று வருவதால் எங்களால் எதனையும் வெளியிடமுடியாது என ஐ.ஜி.பி போலீஸ் அதிகாரிகளுக்கிடையேயான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டபோது டான் ஶ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்தார்.


MH370 விவகாரத்தில் இதுவரை தலைமை விமானி கேப்டன் சஹாரி உட்பட யாரையும் சந்தேக நபராக போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இதுவரை 311 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக