சனி, பிப்ரவரி 14, 2015

பா.ஜ.க கட்சி அலுவலகத்திற்குள் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

பா.ஜ.க கட்சி அலுவலகத்திற்குள் வைத்து 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கொல்கத்தாவில்  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.கொல்கத்தாவின் பெகலா பகுதியில் விளையாட சென்ற தன் குழந்தை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதட்டமடைந்து குழந்தையை தேடிய தாய் தகவல் கேட்பதற்காக அப்பகுதியிலுள்ள பா.ஜ.க கட்சி அலுவலகத்தின் கதவை தட்டினார். அப்போது கதவை திறந்த வாலிபனை தொடர்ந்து அந்த சிறுமி வேகமாக தாயிடம் ஓடி வந்தாள்.

குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்ததாகவும் சிறுமி அலுவலகத்திற்கு உள்ளே சென்று ஒளிந்து கொண்டதாகவும் அந்த வாலிபன் மழுப்பலாக பதில் சொன்னான். இதனால் சந்தேகமடைந்த தாய், வீட்டிற்கு செல்லும் வழியில் தன் குழந்தையின் உள்ளாடையில் இருந்த ரத்தக்கறையை பார்த்து ஆவேசமடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனடியாக குழந்தையை மருத்துவனையில் சேர்த்த போலீசார் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 17 வயது வாலிபனை கைது செய்தனர். அந்த வாலிபனின் தந்தை பா.ஜ.க கட்சி அலுவலகத்திற்கு அருகில் கடை வைத்திருப்பதாகவும் கட்சி அலுவலகத்தின் சாவி அவரது கடையில் தான் இருக்குமென்றும் போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் புரிந்த அந்த வாலிபன் கட்சியின் மண்டல பொறுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக