சனி, டிசம்பர் 22, 2012

அமெரிக்காவில் மீண்டும் டுமில் !! டுமில் !! 4 பேர் பலி !

அமெரிக்காவில் கடந்த வாரம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அங்கு மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. பென்சில்வேனியா (PENNSYLVANIA )மாகாணத்தின் ஃப்ராங்ஸ்டவுன் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கையில் வைத்திருந்த துப்பாக்கியால்
சரமாரியாக சுட்டுள்ளார். அதில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் பலியாகினர். தாக்குதல் நடத்தியவரும் பின்னர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாவலர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள சாண்டி ஹுக் பள்ளியில் 20 வயதான ஆதம் லான்சா என்பவர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 20 குழந்தைகள் உள்ளிட்ட 27 பேர் பலியாகினர். அந்த சம்பவம் நடைபெற்று, ஒரு வாரம் ஆன நிலையில், மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக