ஞாயிறு, மார்ச் 15, 2015

தடையை மீறி நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் ஒற்றுமைப் பேரணி : ஆயிரக்கணக்கானோர் கைது!

இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கருத்து தெரிவித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முகம்மது இஸ்மாயீல் அவர்கள், 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உதயமான தினமான பிப்ரவரி 17 அன்று ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்தோம் எனற முழக்கத்தை முன்வைத்து தேசம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மாபெரும் ஒற்றுமைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை சென்னை மற்றும் திண்டுக்கல்லில் நடத்த திட்டமிடப்பட்டு காவல்துறையிடம் முறையாக அனுமதி கோரப்பட்டது. காவல்துறை பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அனுமதி வேண்டி நீதிமன்றத்தை நாடினோம். நீதிமன்றம் காவல்துறை முன்வைத்த பல பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அனுமதி வேண்டி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பிப்ரவரி 17 அன்று தள்ளுபடி செய்தது.
அதனைத் தொடர்ந்து நீதி வேண்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டில் நீதியரசர்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரவிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து மார்ச் 14 அன்று சென்னையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வேண்டி மீண்டும் காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் கூறியபடி மனுவை உரிய முறையில் பரிசீலிக்காமல் ஆதாரமற்ற , நகைப்புக்குரிய காரணங்களை புனைந்து சங்பரிவார்களை திருப்திப்படுத்தும் நோக்கில் காவல்துறை மீண்டும் அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில்  (14.03.2015) சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் திட்டமிடப்பட்ட ஒற்றுமைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை தடையை மீறி நடத்த முயன்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் M. முஹம்மது அலி ஜின்னா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் ஏ. காலித் முஹம்மது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் M. முஹம்மது ஷேக் அன்சாரி, தமிழ் தேசிய விடுதலை இயக்கம் தலைமை குழு உறுப்பினர் தோழர் தியாகு, SDPI கட்சியின் மாநில செயலாளர் அமீர் அம்ஜா, இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் A.K. முஹம்மது ஹனிபா மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், பெண்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக