செவ்வாய், செப்டம்பர் 17, 2013

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: வெள்ளி பதக்கம் வென்றார் இந்திய வீரர் அமித் குமார்!

ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமார் உள்பட 22 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.
இதில் பிரீஸ்டைல், கிரிகோ ரோமன் ஆகிய பிரிவுகளில் ஆண்களுக்கும், பிரீஸ்டைல் பிரிவில் பெண்களுக்கும் தலா 7 எடைப் பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டி திங்கட்கிழமை முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் 55 கிலோ எடை பிரிவு பிரீஸ்டைல் போட்டியின் இறுதியாட்டத்தில் ஆசிய சாம்பியனான இந்தியாவின் அமித்குமார் ஈரானின் ஹசன் ரஹிமியுடன் மோதினார். இப்போட்டியில் அமித்குமார் தோல்வியை தழுவினார். ஹசன் ரஹிமி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதையடுத்து இரண்டாவதாக வந்த அமித் குமாருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. இது அவருக்கு உலக மல்யுத்த போட்டியின் இரண்டாவது வெள்ளிப்பதக்கமாகும். மொத்தத்தில் அமித் குமார் 8 பதங்கங்களை பெற்றுள்ளார். முன்னர் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் துருக்கியின் செஸர் அக்குலை வீழ்த்தி அமித்குமார் வெற்றிப் பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக