வெள்ளி, செப்டம்பர் 27, 2013

கற்பழிப்பு வழக்கு: பா.ஜனதா கட்சி தலைவருக்கு ஆயுள் தண்டனை...

டேராடூன்,உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் பிரேம் நகரை சேர்ந்த ஒரு தலித் இளம் பெண்ணை, வேலைவாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று உள்ளூர் பாரதீய ஜனதா கட்சி தலைவர் பிரமோத் குப்தா மற்றும் அசோக் குமார் உள்பட 3 பேர் கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கோர்ட்டு, பா.ஜனதா தலைவர் பிரமோத் குப்தாவுக்கு ஆயுள் தண்டனையும் அசோக் குமாருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது. போதுமான சாட்சியங்கள் இல்லாததால் 3–வது குற்றவாளி பிரவீன் விடுதலை செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக