ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

துருக்கி நாட்டில் போலீஸ் தலைமையகம் மீது ராக்கெட் வீச்சு

துருக்கி நாட்டில் போலீஸ் தலைமையகம் மீது ராக்கெட் வீச்சு
அங்காரா, செப். 22- 

துருக்கியில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தலைநகர் அங்காராவில் போலீஸ் தலைமையகம் மீது அடுத்தடுத்து மூன்று ராக்கெட் வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. 

இந்த ராக்கெட் வீச்சில் போலீஸ் தலைமையகத்தின் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. அதே நேரத்தில் உயிர்ப்பலி ஏதும் நேரிட்டதாக தகவல் இல்லை. இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக