வெள்ளி, செப்டம்பர் 13, 2013

சீனாவில் 8 மாத குழந்தையின் ஆணுறுப்பை கடித்து குதறிய குரங்கு! (வீடியோ இணைப்பு)

சீனாவில் தேசிய விலங்கியல் பூங்காவில் தாயுடன் சுற்றிப் பார்க்க சென்ற 8 மாத குழந்தையின் ஆண் உறுப்பை குரங்கு ஒன்று கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.cசீனாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கையாங் மாகாணத்தில் கியான்லிங் தேசிய வன விலங்கியல் பூங்கா உள்ளது. தினமும் இதனை சுற்றிப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.
சீனாவைச் சேர்ந்த குடும்பத்தினர் தனது குழந்தைகளுடன் விலங்கியல் பூங்காவைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது 8 மாத சிறுவனுடன் ஒரு தாய் அங்கு சென்று கொண்டிருந்தார். இங்கு குரங்குகள் தொல்லை அதிகம் இருப்பதாக அடிக்கடி பார்வையாளர்களால் புகார்கள் வருவதுண்டு. பார்வையாளர்களின் பொருட்களை, உணவு பண்டங்களை அவை தூக்கி சென்று தின்று விடும்.
இந்நிலையில் சிறுவனுக்கு சிறுநீர் வந்து விட அவனுக்கு டவுசரை அவனது தாயார் மாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரு குரங்கு பாய்ந்து வந்தது. சிறுவனை தரதர வென்று இழுத்து சென்றது. தாயாரும், சிறுவனும் அலறி கூச்சல் போட்டனர். ஊழியர்கள் விரைந்து வந்து குரங்கிடம் இருந்து சிறுவனை மீட்பதற்குள் தாயின் கண்ணெதிரிலேயே சிறுவனின் உறுப்பை குரங்கு கடித்து குதறியது. இதனால் சிறுவன் படுகாயமடைந்தான்.
ஊழியர்கள் விரைந்து வந்து குரங்கிடம் இருந்து சிறுவனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சிறுவனின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிவித்தனர். ஆனால் எதிர்காலத்தில் அவனுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு பாதிக்கப்படலாம் என்றும் தெரிவித்தனர். இந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக