வெள்ளி, செப்டம்பர் 13, 2013

200 பேருக்கு மரண தண்டனை! -பகிரங்க மன்னிப்பு கோரும் நெதர்லாந்து!

இந்தோனேசியாவில் தமது துருப்பினரால் இழைக்கப்பட்ட மரண தண்டனைகளுக்கு நெதர்லாந்து பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. 1945 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 200 பேர் தூக்கிலிடப்பட்டனர். அத்துடன் நெதர்லாந்து துருப்பினரால் சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இது தொடர்பில் தொடர்ந்த வழக்கு விசாரணைகளில் இடம்பெற்ற அனைத்து சம்பவங்களுக்கும் நெதர்லாந்தே பொறுப்பு கூற வேண்டுமென அந்நாட்டு உயர்நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது.
இதனையடுத்து நெதர்லாந்திற்கான இந்தோனேசிய தூதுவர் பொது மக்கள் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பு கோரியதுடன் இதன்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக