சனி, செப்டம்பர் 14, 2013

திருக்குர்ஆனுக்கு தீ வைக்க முயன்ற கிறிஸ்தவ பாதிரியார் கைது!

ஃப்ளோரிடா: முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனை தீ வைத்துக் கொளுத்த முயன்ற அமெரிக்க பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதன் நினைவு தினத்தையொட்டி மூவாயிரம் திருக்குர்ஆன்  பிரதிகளை தீவைத்துக் கொளுத்த முயன்ற சச்சைக்குரிய அமெரிக்க கிறிஸ்தவ பாதிரியார் டெர்ரி ஜோன்ஸை ஃப்ளோரிடா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 61 வயதான டெர்ரி ஜோன்ஸ்  திருக்குர்ஆனின் பிரதிகளை இரும்புச் சூளையில் நிறைத்து ட்ரக்கில் ஏற்றும்போது பிடிபட்டார்.
இவர் ஏற்கனவே 2011-ஆம் ஆண்டு ஃப்ளோரிடாவில் வைத்து  திருக்குர்ஆன் பிரதியை எரித்த சம்பவம் மேற்காசியா உள்ளிட்ட உலக முழுவதும் பெரும் கலவரத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக