ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

உலக கைப்பந்து தகுதி சுற்று: இந்திய அணிக்கு 2-வது வெற்றி

உலக கைப்பந்து தகுதி சுற்று: இந்திய அணிக்கு 2-வது வெற்றி
சென்னை, செப்.22- உலக கோப்பை ஆண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு போலந்து நாட்டில் நடக்கிறது. இதற்கான ஆசிய தகுதி சுற்று இறுதி ரவுண்டின் ‘சி’ பிரிவு போட்டிகள் சீனாவின் சென்சோவ் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, சீன தைபேயை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 25-19, 21-25, 25-18, 26-24 என்ற செட் கணக்கில் சீன தைபேயை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி, சவூதி அரேபியாவை வென்று இருந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக