புதன், டிசம்பர் 24, 2014

மலம்புழா பண்ணையில் இருதலை பாம்புகள் திருட்டு

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணை சுற்றுலா மையமாகத்திகழ்கிறது. அணையின் அருகே பாம்பு வளர்ப்பு பண்ணை உள்ளது.

இங்கு ராஜநாகம், இருதலையுள்ள நாகம், விஷமில்லாத இருதலைப்பாம்புகள் மற்றும் அரியவகை பாம்புகள் உள்ளன. இதனை ஊழியர்கள் பராமரித்து வரகிறார்கள்.

இந்த நிலையில் பண்ணைக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்த இருதலையுள்ள விஷமில்லாத 5 பாம்புகளை திருடிச்சென்று விட்டனர். ஊழியர்கள் பாம்புகளுக்கு இரைபோடச் சென்ற போதுதான் 5 பாம்புகளை யாரோ திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து பாம்பு பண்ணை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மந்திரவாதிகள் யாராவது அந்த பாம்புகளை கடத்திச்சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலீசார் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக