சனி, டிசம்பர் 20, 2014

ஜப்பானில் பனிப் புயல்: 11 பேர் பலி

ஜப்பானில் வீசி வரும் பனிப் புயலுக்கு 11 பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த நாட்டின் வடக்குப் பகுதியிலும், மத்தியப் பகுதியிலும் கடந்த சில நாள்களாக தொடர்ந்து வீசி வரும் பனிப் புயலால் சாலைகளில் பனி படர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பனிப் புயல் காரணமாக உயிரிழந்த 11 பேரில், பெரும்பாலானவர்கள் வயோதிகர்கள் எனக் கூறப்படுகிறது.
இதுதவிர பனி காரணமாக நேரிட்ட நூற்றுக்கணக்கான சாலை விபத்துக்களிலும் சிலர் உயிரிழந்தனர்.
சாலைகளில் படிந்திருந்த பனியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படை வீரர் ஒருவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
அங்கு நிலவி வரும் மோசமான பருவ நிலை, இன்னும் சில நாள்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக