ஞாயிறு, டிசம்பர் 14, 2014

ஐ.எஸ்.எல். அரை இறுதிப் போட்டி: கேரளா 3-0 என சென்னையை வீழ்த்தியது

ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு லீக் போட்டி நடைபெற்று வந்தது. இதில் புள்ளிகள் அடிப்படையில் நான்கு அணிகள் அரை இறுதிக்கு போட்டிக்கு தகுதிப் பெற்றது.
இன்று நடைபெற்ற ஒரு அரை இறுதிப்போட்டியில் கேரளா- சென்னை அணிகள் மோதின. லீக் போட்டிகள் முடிவில் முதல் இடம் பெற்ற சென்னை அணி, அரை இறுதி போட்டியில் திணறியது.

ஆட்டம் தொடங்கியது முதலே கேரள அணி வீரர்களின் கை ஓங்கியிருந்தது. 27 நிமிடத்தில் அகமது ஒரு கோல் அடித்தார். அடுத்த இரண்டு நிமிட இடைவெளியில் ஹியூம் 29 மீண்டும் ஒரு கோல் அடித்தது. இதனால் முதல் பாதி நேரத்தில் கேரளா 2-0 என முன்னிலையில் இருந்தது.

இதனால் 2-வது பாதி ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு அணி வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்தது. ஆனால், 90 நிமிடம் வரை கோல் அடிக்க முடியவில்லை. 4 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. இதில் மாற்று வீரராக களம் இறங்கிய சுஷாந்த் அபாரமாக கோல் அடித்தார். இதனால் கேரளா 3-0 என வெற்றி பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக