சனி, மார்ச் 04, 2017

துபாய் விமான நிலையத்தில் புதிய லக்கேஜ் விதிகள் !

துபாய் : துபாயில் இருந்து நாடு  திரும்பும் பயணிகள் கொண்டு செல்லும் பொருள்கள்  அடங்கிய பயண  உடமைகளுக்கு புதிய விதிமுறையை துபாய்  விமான நிலைய நிர்வாகம் அமுல்படுத்த உள்ளது. இந்த புதிய விதிமுறை வரும் மார்ச் 8, 2017 ல் இருந்து அமலுக்கு வருவதாகவும் துபாய் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  புதிய விதிமுறைகளின் படி பிரயாணிகள் தங்கள் பயண உடைமைகளை கொண்டு செல்லும்  முறையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் மார்ச் 8ல் இருந்து அமுலுக்கு வரவிருக்கிறது.

1. ஒழுங்கற்ற வடிவத்தில் கட்டப்பட்ட பெட்டிகள் அனுமதிக்கப்படாது.
2.அதிக எடை கொண்ட பயண உடமைகள் அனுமதிக்கப்படாது.
3.வட்ட வடிவத்தில் கட்டப்பட்ட பெட்டிகள் அனுமதிக்கப்படாது.
4.அனைத்து பயண உடமைகளும் தட்டையானதாக இருக்க வேண்டும்.

லக்கேஜ்களை பராமரிக்க‌ உலக தரம் வாய்ந்த அதிநவீன கருவியை துபாய் விமான நிலையம் பயன்படுத்தி வருகிறது. லக்கேஜ்களை அதிநவீன முறையை பயன்படுத்துவதால் வட்ட வடிவம், ஒழுங்கற்ற மற்றும் அதிக எடை கொண்ட பெட்டிகளால் ஏற்படும் அசௌகரியங்களை நிவர்த்தி செய்யவே இந்த விதிமுறைகள் பயன்பாட்டிற்கு வருகின்றன.

ஒழுங்கற்ற பெட்டிகளால் ஏற்படும் நெரிசல் காரணமாக பொருட்கள் கொண்டு செல்லும் பெல்டுகள் பழுதடைவதால் ஏற்றப்பட வேண்டிய வேலையில் தாமதம் ஏற்டுவதால் புறப்படும் நேரங்களும் பாதிக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்  கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் தோராயமாக 9.3 மில்லியம் சாமான்கள் கையாளப்பட்டதாக துபாய் விமானநிலையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக