புதன், அக்டோபர் 19, 2011

புதிய ஹஜ் கொள்கை தேவை: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:புதிய ஹஜ் கொள்கை தேவை என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஹஜ்ஜிற்கு அரசு பிரதிநிதிக் குழுவை அனுப்புவதுக் குறித்து உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. இது மதரீதியான தவறான முன்னுதாரணமாகும். அரசுக்கு இதன்மூலம் அரசியல் ஆதாயம் உருவாகும் என்றாலும் ஹாஜிகளின் பிரச்சனைகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக