புதன், நவம்பர் 16, 2011

இந்தியா ஃபேடர்னிட்டி ஃபாரம் சார்பாக ஹாஜிகளுக்கு செய்த பணிவிடை

இறைவனின் மிகப்பெரும் கிருபையால் இந்தியா ஃபேடர்னிட்டி ஃபாரம் (ஐ.எஃப்.எஃப்) சார்பாக கடந்த 8 வருடங்களாக ஹஜ்ஜுடைய‌ நாட்களில் ஹாஜிகளின் சேவைகளுக்காக பணியாற்றி வருகிறது. தொடக்கத்தில் வெறும் 50 நபர்களை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்ட இந்த சேவை இறைவனின் கிருபையால் சென்ற ஹஜ்ஜின் போது 1000 நபர்களை கொண்டு ஹாஜிமார்களுக்கு சேவை செய்யப்பட்டது.

கடல் கடந்து  பல்லாயிரக்கணக்கான மைல்கள் கடந்து இறைவனின் கட்டளைக்கு இனங்க அவனது கடமையை நிறைவேற்ற லட்சக்கணக்கான மக்கள் அரபு தேசத்தை ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தில் வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மட்டும் அரசு ஹஜ் கமிட்டியின் மூலமாக தனியார் நிறுவனங்களின் மூலமாக பல லட்சம் நபர்கள் ஹஜ்ஜு கடமையை நிறைவேற்ற செல்கிறார்கள். புதிய இடம், புதிய ஊர், பல மொழிகளை பேசக்கூடிய மக்கள் சங்கமிக்கும் இடம், லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற இடமாக இருப்பதால், கல்வி அறிவு இல்லாதவர்கள், வயோதிகர்கள் என பலருக்கும் பல கஷ்டங்கள் ஏற்படுவது இயல்பு.

அந்த வகையில் முடிந்த அளவு சிரமமில்லாமல் ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றி விட்டு நிம்மதியுடன் அவர்கள் நாடு திரும்புவதற்காக இந்தியா ஃபேடர்னிட்டி ஃபாரம் சார்பாக மினாவிலுல் இன்னும் பிற இடங்களிலும் அரபு தேசத்தில் பணி புரியும் இந்தியர்களை ஒருங்கினைத்து இறைசேவைக்காக ஹஜ்ஜுடைய காலங்களில் ஹாஜிகளுக்கு பணிவிடை செய்வதற்காக வாலண்டியர்ஸ்களை நியமிப்பது வழக்கம்.

எந்த ஒரு உலக லாபத்திற்குமில்லாம முழுக்க முழுக்க ஹாஜிமார்களுடைய துஆவினை எதிர்பார்த்தே சகோதரர்கள் அவர்களுக்காக சேவை செய்து வருகின்றனர். எல்லாம் வல்ல அல்லாஹ்! அவர்களுடைய குற்றம் குறைகளை பொறுந்திக்கொண்டு, பாவங்களை மன்னித்தருள்வனாக! ஆமீன்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக