ஞாயிறு, நவம்பர் 13, 2011

ஈரான்:ராணுவ தலைமையகத்தில் குண்டுவெடிப்பு – 27 பேர் மரணம்

டெஹ்ரான்:ஈரான் தலைநகரான டெஹ்ரானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ராணுவ தலைமையகத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர். கராஜ் நகரத்தில் பிட்கானாவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

ராணுவ தலைமையகத்திற்கு ஆயுதங்களை கொண்டுபோகும் வழியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமையகத்திலிருந்து 40 கி.மீ தொலைவு வரை குண்டுவெடிப்பு சப்தம் கேட்டதாக செய்திகள் கூறுகின்றன.
ராணுவ மையத்தின் ஆயுத கிடங்கு முற்றிலும் குண்டுவெடிப்பில் தகர்ந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹுஸைன் கூறுகிறார். மீட்பு பணி துவங்கியுள்ளது. கடுமையாக காயமுற்ற 12 ராணுவத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக